ஈரோட்டில் போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் – பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் படுகாயம்… 20 பேர் கைது | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)


Last Updated:

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே.எம். பூர்ணா எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நள்ளிரவில் லாரி மோதி பீகார் மாநிலத்தை சேர்ந்த காமோத்ராம் என்பவர் உயிரிழந்தார்.

ஈரோடு அருகே தனியார் ஆலை வளாகத்தில் லாரி மோதி வடமாநில தொழிலாளி உயிரிழந்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே.எம். பூர்ணா எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நள்ளிரவில் லாரி மோதி பீகார் மாநிலத்தை சேர்ந்த காமோத்ராம் என்பவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, இழப்பீடு வழங்கக் கோரி, அவருடன் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த மொடக்குறிச்சி போலீசார் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதனால் நிறுவனத்தின் பாதுகாவலர் அறையில் காவலர்கள் பதுங்கிய போது, அந்த அறையை தொழிலாளர்கள் அடித்து நொறுக்கினர்.

-செய்தியாளர்: பாபு.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *