Last Updated:
TN Protest : கடந்த 6 மாதமாக எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வசதி இல்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எனக்கா தாங்கள் ஓட்டு போட்டீர்கள் என கேட்கின்றார். இது குறித்து யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள்ளுங்கள் என கூறுகின்றார். எந்த ஒரு அடிப்படை வசதியம் செய்து தராத இந்த தலைவர் எங்களுக்கு எதற்கு? ஊராட்சி மன்ற தலைவர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், கடந்த 6 மாதமாக எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வசதி இல்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எனக்கா தாங்கள் ஓட்டு போட்டீர்கள் என கேட்கின்றார். இது குறித்து யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள்ளுங்கள் என கூறுகின்றார். எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராத இந்த தலைவர் எங்களுக்கு எதற்கு? ஊராட்சி மன்ற தலைவர் பதவி விலக வேண்டும்.
இங்கு இருக்கும் அனைவரும் கூலி வேலைக்கு செல்பவர்கள் காலை சென்றால் மாலை தான் வருகிறோம். தண்ணீருக்காக நாங்கள் தோட்டம் தோட்டமாக குடிநீருக்கு சென்று அலைய முடியுமா? எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் , திமுக எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து 2 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த சாலை மறியலால் இரண்டு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது மேலும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.
செய்தியாளர்: தினேஷ்
